×

பணகுடி அருகே கோவை தொழிலதிபர் கார் கவிழ்ந்து விபத்து

பணகுடி, அக். 24: கோவை காட்டூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தியாகராஜன் (38), தொழிலதிபர். இவர், நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு மனைவி சகாயபுஷ்பா(35), மகன்கள் கிஷோர்(12), நிஷாந்த்(10) ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை தியாகராஜன் ஓட்டினார்.நேற்று காலை நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முத்துசாமிபுரம் பகுதி நான்குவழிச்சாலையில் கார் வரும்போது நிலை தடுமாறி அங்குள்ள சிறிய பாலத்தில் கவிழ்ந்தது. இதில் குடும்பத்தினர் சிக்கி தவித்தனர். தகவலறிந்து பணகுடி போலீசார் விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் படுகாயத்துடன் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car accident ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...