×

கழுகுமலையில் விழிப்புணர்வு பேரணி

கழுகுமலை, அக். 24: கழுகுமலையில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை வகித்த தலைமையாசிரியர் சீதா மகேஸ்வரி துவக்கிவைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ராஜ் மற்றும் செல்லையா முன்னிலை வகித்தனர். பேரணியில் நாட்டு நலப்பணித்திட்டம், பசுமைப் படை, தேசிய மாணவர் படை மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மக்களிடத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியில் இருந்து துவங்கிய இப்பேரணி மேல பஜார், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பள்ளியை மீண்டும் வந்தடைந்தது. சிறப்பு அழைப்பாளராக ரோட்டேரியன் முத்துச்செல்வம் பங்கேற்றார்.  ஏற்பாடுகளை என்சிசி அலுவலர் ராஜ்மோகன் செய்திருந்தார்.


Tags : Awareness rally ,Eagle Hill ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி