×

நகை திருடியவர் கைது

திருச்செந்தூர், அக். 24: தி ருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன்பட்டினம் சண்முகபுரம் காந்திநகரை சேர்ந்த பிச்சாண்டி மனைவி ஆறுமுகம் அம்மாள் (55). இவர் தனது பழைய நகையை விற்று, புதிதாக நகை வாங்கும்பொருட்டு நேற்று முன்தினம் தனது மகன் மாரிமுத்துவுடன் ்அவரது மொபட்டில் திருச்செந்தூருக்கு புறப்பட்டார்.  திருச்செந்தூர் பஸ்நிலையம் அருகே வந்ததும் அங்குள்ள கடை முன் மொபட்டை நிறுத்திவிட்டு இருவரும் டீ குடித்துக்கொண்டிருந்தனர். இதனிடையே மொபட்டின் முன்பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த நகைபையை நோட்டமிட்டு கவனித்த மர்மநபர், திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். இதை பார்த்த ஆறுமுகம் அம்மாள் திருடன்...திருடன்..என கத்தினார். இதையடுத்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள், விரட்டிச்சென்று மர்மநபரை பிடித்து திருச்செந்தூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ராதாபுரம் அடுத்த சீலாத்திகுளத்தை சேர்ந்த பரமசிவம் (56) என தெரியவந்தது. இதையடுத்து அவரைகைதுசெய்த போலீசார், பையில் இருந்த நகையை மீட்டனர். தீபாவளி நேரம் நெருங்குவதால் இதுபோன்ற திருட்டு ஆசாமிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்