காஞ்சிபுரம், அக்.24: ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவி–்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்காக 2019- 2020ம் நிதியாண்டில் ஆவின் பாலகம் அமைக்க, ஆவின் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய முன் பண தொகை ₹25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளுக்கு மானியமாக ₹25 ஆயிரம் என ₹50 ஆயிரத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியமாக வழங்குகிறது.எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, அதன் விவரத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஜிஎஸ்டி ரோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் தொலைபேசி எண் 044 27431853 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தனியார் தொழில் வளாகங்கள், தனியார் மருத்துவ மனைகள், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமையில் இடவசதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.