×

சிறையிலுள்ள பெண் கஞ்சா வியாபாரி உதவியுடன் 11 கிலோ கஞ்சா பதுக்கிய திருநங்கை அதிரடி கைது

சென்னை, அக். 24: சிறையில் உள்ள பெண் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு 11 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் குணா (எ) சித்ரா (30). திருநங்கையான இவர், வியாசர்பாடி சத்யா நகரில் உள்ள கஞ்சா வியாபாரி அமுலுவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை ெசய்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் அமுலுவை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்போது அமுலு பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பத்திரமாக வைத்திருக்கும்படி குணாவிடம் கொடுத்து சென்றுள்ளார்.அதன்படி குணா கஞ்சாவை சிந்தாதிரிப்பேட்டை பழைய பங்களா தெருவில் வசித்து வரும் திருநங்கைகளான உஷா, பவித்ரா, சைனி ஆகியோருடன் கஞ்சாவை எடுத்து வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.இதுகுறித்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அதிரடியாக அன்னை சத்யா நகருக்கு சென்று குணா வீட்டில் சோதனை நடத்தி 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திருநங்கை குணாவை போலீசார் கைது செய்தனர்.

Tags : ganja dealer ,
× RELATED காவல் நிலையத்தில் இருந்து கஞ்சா வியாபாரி எஸ்கேப்