×

மீஞ்சூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் சாலையில் திரியும் மாடுளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பொன்னேரி, அக். 24:  மீஞ்சூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதால் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் - பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக  தினமும் ஆந்திராவுக்கு  பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள்  என ஏராமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், மீஞ்சூர்   மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  மீஞ்சூர் பஜார் பகுதிக்கு  தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க வருகின்றனர். இதனால் மீஞ்சூர் பஜார் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மீஞ்சூர் - பொன்னேரி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை விட சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில இந்த மாடுகள் சாலையில் படுத்திருப்பதால் தொடர் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மழைக்காலம் என்பதால் மாடுகள் அனைத்தும் சாலையில் சுற்றித் திரிகின்றன. அந்த பகுதியில் மின் விளக்குகள் எரியாததால்  விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும்  இடையூறாக  சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகமும், மீஞ்சூர் காவல் துறையும் பிடித்து அப்புறப்படுத்தவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22, 23, 24, 25, 26 ஆகிய வார்டு பகுதிகளான புழல், கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், புனித அந்தோணியார் நகர், கடைவீதி, அண்ணா நினைவு நகர், எம்ஜிஆர் நகர், கதிர்வேடு, புத்தகரம், சூரப்பட்டு, பாரதிதாசன் நகர், சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் இந்த வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் நாய் குறுக்கே வரும்போது அதன் மீது ஏறி விபத்துகள் ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட மாதவரம் மண்டல அலுவலகத்தில் புகார் செய்தும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பு ஊசி போட்டுகருத்தடை ஊசி போட்டு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,highway ,Meenkoor - Ponneri ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு