×

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, அக். 24: தீபாவளி போனசை உயர்த்தி வழங்ககோரி தனியார் சிமென்ட் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தீபாவளி போனஸ்  கூடுதலாக வழங்க வேண்டும். தொழிற்சாலையில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். பெண்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த சில நாட்களாக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள், பணிகளைப் புறக்கணித்து தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சிமென்ட் ஏற்றும் பணி தடைபட்டது.  
தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Staff demonstration ,cement factory workers ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்