×

திருவள்ளூர் ேவலைவாய்ப்பு மையத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருவள்ளூர், அக். 24: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப்-2 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் முதலில் நன்கு பயிற்சி பெற வேண்டும். பயிற்சி வகுப்பில் படிப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக பயிற்சி பெற, பயிற்சி வகுப்பில் நடத்துப்படும் அனைத்து டெஸ்ட்களை எழுதுவதன் மூலம் நன்கு பயிற்சி பெறலாம். இதன் மூலம் நாம் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு என்பது அறிந்து, பின்பு அதற்கேற்ற முறையில் படிக்க இயலும். வகுப்பில் மட்டுமில்லாமல் வீட்டிலும் பயிற்சி பெற வேண்டும். மேலும், நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறவும், டெஸ்ட் எழுதிய விடைத்தாள்களை ஒருவருக்கொருவர் திருத்தம் செய்வதன் மூலமும் மேற்கொண்டு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற முடியும்’’’’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் வே.சீனிவாசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tiruvallur Career Center ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...