×

மழைக்காலத்தில் மின்விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

புதுச்சேரி, அக். 24: புதுச்சேரி மின்துறை நகரம் (இயக்குதலும் பராமரித்தலும்) பிரிவு செயற்பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மழைக்காலங்களில் மின்விபத்துக்களை தவிர்க்க மின்கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு போன்றவற்றை கட்டக்கூடாது. மின்கம்பங்களில் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவும். மழைக்காலத்தில் இடி மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1912க்கு தெரிவிக்கலாம்.
இடி மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூ–்டடர், கைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும், இத்தகைய மின்சாதனங்களின் இணைப்பு ஒயரை பிளக்கில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின்இழுவை கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும். வீட்டில் சுவர்களில் மின்சாதனங்களில் மின்அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்து விடவும் மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் செயின், கம்பிகள், பச்சைக்கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின்கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும்.  

 பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கான வழிமுறைகள்: பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. உடைந்த சுவிட்ச, பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. பிளக் சுவிட்சை அணைத்தபிறகே மின்விசிறி, அயர்ன்பாக்ஸ், செல்போன் சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்க வேண்டும். டிவி ஆண்டனாக்களில் மின்வயரை கட்டக்கூடாது. மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது. நில இணைப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தரை தழுவும்போது ஈரக்கைகளால் இணைப்பில் இருக்கும் டேபிள்பேன், பெடஸ்டல் பேன் போன்றவற்றை நகர்த்தக் கூடாது. அவற்றை முன்னதாகவே மின்இணைப்பில் இருந்து அகற்றிவிட வேண்டும். கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில இணைப்பு கொடுக்க வேண்டு–்ம. பயன்படுத்தும்போது உலர்ந்த ரப்பர் விரிப்பு போட்டுக் கொள்வது நல்லது.   ஒரு மின்சாதனத்துக்கான ஒயரில் வேறு எந்த மின்சாதனத்தையும் இணைக்க கூடாது. பழுதான சுவிட்ச் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டு–்ம. சுவிட்ச்போர்டு மின்மோட்டார் தண்ணீர் பம்ப்மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே மின்சார ஒயரிங் வேலைகளை செய்ய வேண்டும். ஈரக்கையால் சுவிட்ச போடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...