×

பெண் சாராய வியாபாரி தடுப்புக்காவலில் கைது

விழுப்புரம், அக். 24:  திண்டிவனம் அருகே பிரபல பெண் சாராய வியாபாரி தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்எடையாளம் வீரப்பன்கோயில் தெருவை  சேர்ந்த கலியபெருமாள் மனைவி தனலட்சுமி (48). பிரபல சாராய வியாபாரி.  தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற தொழிலில்  ஈடுபட்டு வந்துள்ளார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில்  வெளியேவரும் அவர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரது நடவடிக்கையை  தடுக்கும் வகையில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தடுப்புக்காவலில் கைது  செய்ய ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர்  சுப்ரமணியன் அதற்கான உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தனலட்சுமியை கைது செய்து கடலூர்  சிறையில் அடைத்தனர்.

Tags : liquor dealer ,
× RELATED சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது