×

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, அக். 24: திட்டக்குடி பகுதியில், வெள்ளாற்றில் அனுமதிக்கப்பட்ட அந்தந்த ஊர் பகுதியில் மட்டும் மணல் எடுக்க வேண்டும். திட்டக்குடியில் பழுதடைந்துள்ள குடிநீர் மினி டேங்க் கை பம்புகளை சரிசெய்து தரவேண்டும். திட்டக்குடி வீமன் ஏரியில் இருந்து கூத்தப்பன்குடிக்காடு வாய்க்கால் கரையில் புதிதாக சாலை வசதி செய்து தரவேண்டும். பேரூராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து வாய்க்காலை ஆழப்படுத்தி தரவேண்டும்.அண்ணா நகரில் புதிதாக மேல் நிலை தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

அனைத்து தெருக்களிலும் சாக்கடை கால்வாய்களை சீர் அமைத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி பேரூராட்சி வளாகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட குழு உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலாளர் சண்முகம், முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை, துணை செயலாளர் சக்திவேல், வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் சிவஞானம் உட்பட பலர்  கலந்து கொண்டு பேசினர் ஆர்ப்பாட்டத்தில், பழனி, கொளஞ்சி, சீனிவாசன், பாலமுருகன், பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Indian ,demonstration ,Communist ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...