×

கடலூரில் ரேமண்ட் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா

கடலூர், அக். 24: கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ரேமண்ட் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளுக்கான ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.கடலூர் ரேமண்ட் ஷோரூம் கிளை நிர்வாகி அப்துல் ஆசிப் மற்றும் சலீம், முஸ்தாக் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், வள்ளி விலாஸ் மருத்துவமனை டாக்டர் கண்ணன் ஆகியோர் ஷோரூம் புதிய கிளையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். ஓட்டல் ஆனந்த பவன் குரூப்ஸ் ராமசுப்பு, ராம்கி நாராயணன், கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவரும் கோல்டன் சிட்டி அரிமா சங்க தலைவருமான அரிமா பிரகாஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ, கஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகிய நத்தம் முத்து, மருதாடு சுரேஷ், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், ஆனைகுப்பம் ராமு, ஓட்டல் நிலா தங்கராசு, வழக்கறிஞர் வினோத் மற்றும் அன்பழகன், ராஜா, ராஜகுரு, திமுக மகளிர் அணி நாகரத்தினம், அம்புஜம், சாந்தி மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். ரேமண்ட் தற்போது கடலூரில் முதன்முறையாக பிரத்யேக ஷோரூமை துவக்கியுள்ளது. சூட்டிங், ஷர்ட்டிங் மற்றும் பிளேசர், ஜீன்ஸ் உள்பட பல்வேறு ரகங்களில் ஜீன்ஸ், ஷர்ட் ஆண்களுக்கான அனைத்து ஆடை வகைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Raymond Showroom New Branch Opening ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை