×

பெ.பொன்னேரியில் நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பெண்ணாடம், அக். 24: பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கடந்த ஆண்டு புதிய நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நிறுத்தப்பட்டது.அன்றைய தினத்தில் இருந்து இன்றுவரை நிழற்குடை கட்டும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அருகிலுள்ள மரத்தின் நிழலிலும் நின்று பேருந்து ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பேருந்து வரும்போது மர நிழலில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக ஓடி வந்து  ஏறுகின்றனர். இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponneri ,shadow shop ,
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்