×

கடத்தப்பட்ட முந்திரி வியாபாரி மீட்பு

பண்ருட்டி, அக். 24: பண்ருட்டி அருகே இருளகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(43). முந்திரி வியாபாரி. இவர் காடாம்புலியூரில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார் . இவருக்கும், மேட்டுக்குப்பத்தில் உள்ள மற்றொரு முந்திரி வியாபாரிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் பணத்தை திரும்ப கொடுப்பதில் ஜனார்த்தனன் காலதாமதம் ஏற்படுத்தினார். கடன் கொடுத்த மேட்டுகுப்பம் முந்திரி வியாபாரி பணத்தை கேட்டு தொடர்ந்து வலியுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 20 பேர் கொண்ட கும்பலால் ஜனார்த்தனன் கடத்தப்பட்டு மேட்டுக்குப்பத்தில் உள்ள முந்திரி வியாபாரியின் குடோனில் அடைத்து வைக்கப்பட்டார். இதுகுறித்து ஜனார்த்தனன் மனைவி மற்றும் உறவினர்கள் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மேட்டுகுப்பம் சென்று அங்கு அடைத்து வைத்திருந்த ஜனார்த்தனனை அதிரடியாக மீட்டனர். மேலும் இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேட்டுக்குப்பத்தை சேர்ந்த முந்திரி வியாபாரி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  ரூ.5 லட்சம் கடன் தொகைக்காக முந்திரி வியாபாரி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Cashew Dealer ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது