×

கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கெங்கவல்லி, அக்.24: கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கெங்கவல்லி அருகே கடம்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.பேரணியை பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முன்னதாக டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. டெங்குவை ஒழித்திடுவோம், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம்,கைகளை அடிக்கடி கழுவிடுவோம் போன்ற  வாசகங்களை தலைமையாசிரியர் கூற மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேரணியில் ஆசிரியைகள் , பள்ளி மேலாண்மைக் குழுவினர் திரளாக பங்கேற்றனர். பொதுமக்களிடம் டெங்கு பற்றிய அச்சிட்ட பிரதிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்ப்பட்டது.



Tags : Dengue Prevention Awareness Rally ,Kadampur Government Primary School ,
× RELATED வடமங்கலம் கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி