×

இடங்கணசாலையில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

இளம்பிள்ளை, அக்.24: இடங்கணசாலையில், பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்ைக எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டு மோட்டூர், புவனகணபதி கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இவ்விடத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் கோயில்களும் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் இழுத்து மூடி பூட்டி வைத்துள்ளது. இதனால், அப்பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : sanctuary ,premises ,
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்