×

டாக்டர் பட்டம் பெற்று முதன்முறையாக சேலம் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு


சேலம், அக்.24:டாக்டர் பட்டம் பெற்று முதன்முறையாக சேலம் வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான வெங்கடாசலம் பேசுகையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர், முதன்முறையாக இன்று (24ம் தேதி) சேலம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இரவு சிலுவம்பாளையத்தில் தங்கும் முதல்வர், நாளை (25ம் தேதி) காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு வருகிறார். முன்னதாக, காலை 8 மணியளவில் திருவாக்கவுண்டனூர் அருகே அவருக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்,” என்றார். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், ஆர்.ஆர்.சேகரன், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநகர பொருளாளர் பங்க்.வெங்கடாசலம், நிர்வாகிகள் பாலு, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், யாதவமூர்த்தி, சண்முகம், சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், ராமராஜ், கென்னடி, மீன் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : time ,Salem ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...