×

அருணா டிரேடர்ஸின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா

திருச்செங்கோடு, அக். 24: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில், 55 ஆண்டுகளாக அருணா டிரேடர்ஸ் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. தற்போது இந்த பங்க், பல்வேறு வசதிகளுடன் நவீன மயமாக்கப்பட்டு தானியங்கி நிலையமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் அருணா டிரேடர்ஸ் நிறுவனத்தின் 55ம் ஆண்டு நிறைவு விழா ஆகியவை நேற்று நடந்தது.  உரிமையாளர் முருகேசன் வரவேற்றார். மேலாண் இயக்குனர் குமரன், பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். பாரத் பெட்ரோலியம் கரூர் வட்டார  மேலாளர் விக்ரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கரூர் பொறியாளர் ரிஷி, நாமக்கல் ரபீல், விக்னேஷ் உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளை திறந்து வைத்தனர். ஜெயா முருகேசன் அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் திருச்செங்கோடு பிஆர்டி நிறுவன தலைவர் தங்கராசு, பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, செயலாளர்  லோகநாதன், பொருளாளர் வெள்ளியங்கிரி, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் மற்றும் வாடிகையாளர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சுகுணா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

Tags : Petrol Punk Opening ,Aruna Traders ,
× RELATED பெட்ரோல் பங்க் திறப்பு விழாவுக்கு...