×

திருச்செங்கோட்டில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

திருச்செங்கோடு, அக்.24: திருச்செங்கோடு நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு  பேரணி திருச்செங்கோட்டில் நேற்று நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் (பொ)  சுகுமார் தொடங்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் அரசு பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியின் போது மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். டூவீலர் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிவோம், சுற்றுச்சூழலை பாதுகாத்து டெங்குவை  ஒழிப்போம், சுகாதாரத்தை பேணுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.இந்த பேரணியில், ரோட்டரி சங்க தலைவர் பிரகாசம், செயலாளர் வாட்டர் பிரகாஷ், திருச்செங்கோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Tiruchengode ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு