×

தேங்காய் வியாபாரி கொலையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி, அக்.24: ராயக்கோட்டை அருகே, தேங்காய் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாக்கப்பன்(65). தேங்காய் வியாபாரியான இவரது மனைவி பொன்னியம்மாள், தாய் சூடம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் அனைவரும்  தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த 6 பேர் கும்பல், நகை, பணம் கேட்டு சாக்கப்பனின் கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டினர். அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த கொள்ளை கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாக்கப்பன் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பலை பிடிக்க ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி முரளி மேற்பார்வையில், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், உத்தனப்பள்ளி எஸ்ஐ ஆனந்தன் மற்றும் கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘சாக்கப்பனின் செல்போன், அவரது குடும்பத்தாரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பல் விரைவில் பிடிபடுவார்கள்,’ என்றனர்.

Tags : formation ,units ,murder ,coconut dealer ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...