×

மணியம்பாடியில் மக்கள் தொடர்பு முகாம்

கடத்தூர், அக்.24: கடத்தூர் அருகே மணியம்பாடி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான் தலைமை வகித்தார். அரூர் சப்கலெக்டர் பிரதாப் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார்(சமூக பாதுகாப்பு திட்டம்) கனிமொழி வரவேற்றார். இதில், ₹10.31 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மேலும், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 40 மனுக்களை பொதுமக்கள் ெகாடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாமில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் இளஞ்செழியன், மண்டல துணை தாசில்தார்கள் ஜெய்செல்வன், மகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் எழில்மதி, கிராம நிர்வாக அலுவலர் அரிநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags : People Contact Camp ,Maniyambadi ,
× RELATED கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்