கடத்தூர், அக்.24: கடத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ேநாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், சுற்றுப்புற தூய்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) லீலா, பத்மாவதி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.