×

அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் சாவு

புதுக்கோட்டை, அக்.24: அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களப்பக்காடு முரளிதரன் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி (35). இவர் வாஷிங் மிஷினில் துணி துவைப்பதற்காக துணிகளை கொட்டி, சோப்பு பவுடர் போட்டு மிஷினை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் உமாமகேஸ்வரியை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா