×

சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் விளக்க பிரசாரம்

புதுக்கோட்டை, அக்.24: சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் நவ.12ம் தேதி புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பேரணியும், நவ.26ம் தேதி மாவட்ட அளவிலான சாலை மறியல் போராட்டமும் நடத்த உள்ளனர்.

இந்தப் போராட்டத்தை விளக்கி நேற்று புதுக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற பிரசார இயக்கத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் காமராஜ், செயலாளர் அன்பு, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகிகள் விசாலாட்சி, துரை.அரங்கசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மநில செயலாளர் சத்தி நிறைவுரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

Tags : Delivery Staff Pickup campaign ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...