×

திருவண்ணாமலையில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட டீ கடை மாஸ்டருக்கு பீர் பாட்டில் குத்து

திருவண்ணாமலை, அக்.24: திருவண்ணாமலை அடுத்த மழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(43). இவர் திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில் இவரது டீக்கடையில் நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை வஊசி நகரை சேர்ந்த பர்வீன்(23), இவரது நண்பர்கள் சூர்யா நகரை சேர்ந்த நாகராஜ்(34), பேகோபுரம் 4வது தெருவை சேர்ந்த விக்னேஷ்(25), ராம்ஜிநகரை சேர்ந்த சிகாமணி(20) ஆகிய 4 பேரும் மது அருந்தி உள்ளனர். இதை செல்வக்குமார் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து செல்வக்குமாரை பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமார் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்வீன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...