நாகர்கோவில், அக்.24: தாம்பரம் - கொச்சுவேளி ரயிலுக்கு இரணியல், குழித்துறையில் நிறுத்தங்கள் அனுமதிக்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக ரயில் எண் 06031 தாம்பரம்- கொச்சுவேளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் பிரிவுகளில் அதிக பயணிகள் பயன்பெறும் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில் எண் 06031 தீபாவளி பண்டிகையை ெகாண்டாட தென் மாவட்டம் வருகின்ற பயணிகளுக்கு வசதியாக அமையும். ஆனால் இந்த ரயிலுக்கு இரணியல், குழித்துறை, நெய்யாற்றின்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தாலுகா மக்கள் மிகுந்த சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே பயணிகள் வசதிக்காக இந்த ரயிலுக்கு இரணியல், குழித்துறை மற்றும் நெய்யாற்றின்கரை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் அனுமதிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.