×

தேனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, அக். 23:தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. தேனி மாவட்டத்தின் முக்கிய அணைகளாக பெரியார், வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகள் உள்ளன. இவ்வணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் சோத்துப்பாறை அணை ஏற்கனவே, நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேறி வருகிறது. அணைகளின் நீர்மட்டம் விபரம் வருமாறு: பெரியாறு அணையில் தற்போது 126.75 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 199 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1 ஆயிரத்து 360 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் பெரியாறு அணையில் 134.35 அடிக்கு நீர்நிரம்பியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரதது 918 கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
வைகை அணை: வைகை அணையில் தற்போது 62.93 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 634 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் வைகை அணையில் 69 அடிக்கு நீர்நிரம்பியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரதது 616 கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்தி 916 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

மஞ்சளாறு அணை:
மஞ்சளாறு அணையில் தற்போது 51.60 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 331 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த ஆண்டு இதேநாளில் பெரியாறு அணையில் 54.50 அடிக்கு நீர்நிரம்பியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 127 கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கடந்த ஆண்டும் இதேநாளில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

சோத்துப்பாறை அணை:
சோத்துப்பாறை அணையில் தற்போது 126 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 305 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் சோத்துப்பாறை அணை முழுமையாக நிரம்பியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 78  கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

சண்முகாநதி அணை:
சண்முகாநதி அணையில் தற்போது 48.60 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.  கடந்த ஆண்டு இதேநாளில் சண்முகாநதி அணையில் 52.50 அடிக்கு நீர்நிரம்பியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

Tags : Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்