×

கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்துப் போட்டி

கூடலூர், அக். 23: கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்துப் போட்டியில் கம்பம்  ஆதிசுஞ்சனகிரி கல்லூரி முதலிடம் பிடித்தது. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து மற்றும் மேசைப் பந்து போட்டிகள் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா பல்கலைகழகத்தின் உதவி உடற்கல்வி ஆசிரியை ராஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏழு கல்லூரிகள் கலந்து கொண்டன.இப்போட்டியில்  ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிகள் இறகுப்பந்து போட்டியில் முதல் இடத்தையும், மேசைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி செயலர் கம்பம் இராமகிருஷ்ணன், இணைச்செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி கல்லூரி முதல்வர் ரேணுகா, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், உடற்கல்வி பொறுப்பாளர் சுசிலா, உடற்கல்வி ஆசிரியை சூர்யபிரபா, பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்திப் பாராட்டினர்.

Tags : Featherweight competition ,colleges ,
× RELATED கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு கலை...