×

சாலையில் கழிவுநீர் குளம், கண்மாய்களை தூர் வார திமுக இளைஞரணி கூட்டத்தில் முடிவு

போடி, அக். 23: நகர ஒன்றிய கிராமங்களில் குளம் மற்றும் கண்மாய்கள் தூர்வாரி நடவடிக்கை எடுப்போம் என திமுக இளைஞரணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.போடி டி.வி.கே.கே நகரில் தனியார் மண்டபத்தில் போடி நகர ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்திற்கு போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். போடி நகர செயலாளர் மாவீசெல்வராஜ் முன்னிலை வகித்தார்.மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமதுஜின்னா, மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இளைஞரணி உறுப்பினர்களை தொய்வில்லாமல் தீவிரமாக சேர்க்க வேண்டும். போடி மற்றும் ஒன்றிய கிராமங்களில் தூர்வாரப்படாடல் விடப்பட்டுள்ள கண்மாய்கள், குளங்களை இளைஞரணியினர், திமுவினர் சேர்ந்து மழை வருவதற்குள் தூர்வாரி நடவடிக் கை எடுக்க வேண்டும். நிலத்தடிநீர் ஊற்றெடுக்கவும் விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் பயன்படும் விதமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வக்கீல் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் குரு.இளங்கோ, பரமசிவம், ஜெயராஜ், அவைத்தலைவர்கள் நகரம் சின்னத்துரை, ஒன்றியம் பாண்டுரங்கன் நகர இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனிகுமார் மற்றும் நகர ஒன்றிய திமுகவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags : Sewage pond ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...