தேனி, அக். 23:தேனி-ஊஞ்சாம்பட்டியில் லியோகோஜூரியோ கராத்தே சங்கத்தின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. 8 வயது முதல் 50 வரையுள்ளவர்களை பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்து சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.கட்டா, குமிட்டோ முறைகளிலும், அனைத்து வயது பிரிவினரும் கலந்து கொண்ட ஒட்டுமொத்த கட்டா சேம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஒட்டுமொத்த கட்டா பிரிவின் சேம்பியன்ஷிப் கோப்பையை தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் நிரஞ்சன் பெற்றார். இப்போட்டிகளில் நடுவர்களாக பார்த்திபன், ஈஸ்வர், ஜோதிராமலிங்கம் செயல்பட்டனர். போட்டிகளை எபினேசர் சார்லஸ் ஒருங்கிணைத்தார்.ஏற்பாடுகளை லியோகோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் லியோமுத்தையா செய்தார்.