கும்பகோணம், அக். 23: கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சதுர்காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது.பின்னர் பைரவர் சுவாமிக்கு வெள்ளி கவசம், வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.