×

பாபநாசம், ராஜகிரியில் தெருநாய்கள் தொல்லை பொதுமக்கள் அவதி

பாபநாசம், அக். 23: பாபநாசம், ராஜகிரி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம், ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்களை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க முயல்கிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் படிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினம்தோறும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சமீபத்தில் வடக்கு நாயகன்பேட்டையில் ஒருவரின் கால் விரல்களை வெறிநாய் கடித்து குதறியது. இதனால் பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் சென்று வர அச்சத்துடன் உள்ளனர். எனவே பாபநாசம், ராஜகிரி பகுதியில் தெருநாய்களை சுற்றி திரிவதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Papanasam ,Rajagiriya Street ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!