×

திண்ணப்பா கார்னர் பகுதியில் புதர் மண்டிய வாய்க்காலில் கழிவு நீர் செல்லும் அவலம்

கரூர், அக். 23: கரூர் நகராட்சிக்குட்பட்ட திண்ணப்பா கார்னர் பகுதியில் புதர் மண்டிக்கிடக்கும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குபட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள திண்ணப்பா நகர் வழியாக பல்வேறு பகுதிகளை கடந்து வரும் வாய்க்கால் செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் மட்டுமே சென்று கொண்டிருந்த இந்த வாய்க்காலில் தற்போது கழிவு நீர் செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வாய்க்கால் பகுதி முழுதும் புதர் மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த வாய்க்காலை தூர்வாரி மழைநீர் எளிதாக சென்று பிரதான கால்வாயில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த வாய்க்காலை தூர்வாரிட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : area ,Dinnappa Corner ,
× RELATED வாட்டி வதைக்கும்...