கரூர், அக். 23: நலவாரியத்தில் ஆதார் எண்ணை வரும் 31ம் தேதிக்குள் இணைத்து பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 2004 முதல் 2015ம் ஆண்டு வரை பதிவுபெற்ற தொழிலாளர்கள் தங்களது பதிவு இதுவரை புதுப்பித்து கொள்ளாதவர்கள் உடனே பதிவு புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க வரும்போது தங்களது ஆதார் எண்ணை இணைத்து வரும் 31ம் தேதிக்குள் கரூர் வெண்ணைமலை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு இணைக்காதவர்களின் பதிவு ரத்து செய்தும் தொழிலாளர் நல வாரியத்தில்இருந்து உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க இயலாது. ஆதார் எண் சேகரிக்க அலுவலகப் பணியாளர்கள் தங்களது பகுதிக்கு வரும்போது அவர்களிடம் நேரில் வழங்க வேண்டும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.