×

தொழிலாளி திடீர் சாவு

புதுச்சேரி, அக். 23: புதுவை கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகர் நாகத்தம்மன் கோயில் வீதியில் வசித்தவர் செந்தில்குமார் (37), தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று குடித்துவிட்டு வீடு திரும்பிய செந்தில்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு