×

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்,அக்.23: நீடாமங்கலம் நியாய விலை கடை முன் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்மணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..மாவட்டத்தலைவர் சுமதி முன்னிலை வகித்தார் மாவட்ட,ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீடாமங்கலம் நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை. தரமான அரிசியாக வழங்க வேண்டும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொருள்களும் வழங்க வேண்டும்.ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தவராமல் கோதுமை வழங்க வேண்டும்.எல்லா பொருள்களையும் ஒரே நாளில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரே தேசம் ஒரே கார்டு அமுல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


Tags : Mathers ,ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா