×

நீடாமங்கலத்தில் இருந்து 1250 டன் அரிசி மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,அக்.23: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ,மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்களை அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து.அங்கிருந்து பல்வேறு திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் அரவை செய்த அரிசிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் பெட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காகவும்,அரிசிகளை பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று மத்திய சேமிப்பு கிடங்கு பாமணியிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் போது ரக அரிசிமூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து 21 ரயில் சரக்கு பெட்டிகளில்(வேகன்) தொழிலாளர்கள் ஏற்றி சேலம் மண்டலத்திற்கு பொதுவினியோக திட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Salem ,Needamangalam ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...