செங்கல்பட்டு அக்.23: டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டில் நேற்று நடந்தது. செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இ.சங்கர், மாநில குழு உறுப்பினர் வா.பிரமிளா, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.அரிகிருஷ்ணன், வி.தமிழரசி, திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் எம்.குமார், பகுதி குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, என்.அன்பு, என்.அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை தனியார் கடைகளில் வாங்க நிர்ப்பந்திக்க கூடாது. மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சலில் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.