×

ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் இலவச மின்சாரம் பெற குவிந்த விவசாயிகள்

ஓசூர், அக்.18: தமிழக  அரசால் தட்கல் முறை திட்டத்தில் வழங்கப்படும் இலவச மின் இணைப்புகளை பெற  ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.மின்வாரியத்தால்  விவசாயிகளுக்கு தட்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  ஓசூர் மின்வாரிய கோட்டத்தில் 350 விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின்  இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.4.2000 முதல்  31.10.2019 வரை பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது.  ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை,  அஞ்செட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான  விவசாயிகள் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற வந்திருந்தனர். அதிகாரிகள் உத்தரவின்படி 350  மின்சார இணைப்புகளுடன் மேலும் 200 இணைப்புகள் வழங்க விண்ணப்பங்கள்  சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை அதிகப்படுத்த வேண்டும் என  விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Focus farmers ,Hosur Electricity Office ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு