×

ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், அக்.18: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரியில்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அற்றிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து நேற்று திருவில்லிபுத்தூர் கைகாட்டி கோவில் பஜாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி,  மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான லிங்கம், மாவட்ட துணை செயலாளர் பழனிக்குமார்,  நிர்வாக குழு உறுப்பினர்  கோவிந்தன்  பலவேசம், நகரச் செயலாளர் மூர்த்தி, சவுந்திரபாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னாள் எம்பி லிங்கம் கூறும்போது, அழகாபுரியில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது 25 ஆண்டுகளுக்கு முந்தைய மரங்களையும் அகற்றி விட்டனர். பாலங்கள் அமைக்கும்போது நெடுஞ்சாலைத்துறையினர் சப்வே அமைப்பதில்லை. அழகாபுரியில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் ஏதோ சோசியல் பாரெஸ்ட் போல் மரக்கன்றுகளை வைத்துள்ளனர் என்றார்.



Tags : Communist ,Indian ,demonstration ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...