×

ஞாயிறு தோறும் மருதுபாண்டியர் குருபூஜை ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை, அக்.18: மருதுபாண்டியர் குருபூஜை, முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதற்கு தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மதுரை சரக டிஐஜி ஆணி விஜயா, விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன், ஏடிஎஸ்பி மாரிராஜன் மற்றும் அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், திருச்சுழி டிஎஸ்பி சசிதர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள், டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில்  மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தான் செல்ல வேண்டும்.  முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.  தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும்.  முக்கிய கிராமங்களில் போலீசார் முன்னெச்சரிக்கையாக கூட்டங்கள் நடத்த வேண்டும்.  பசும்பொன் செல்லும் வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags : Marutpandiyar Kurupuja Consultative Meeting ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...