×

மானாமதுரையில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்

மானாமதுரை, அக். 18: மானாமதுரை கன்னார்தெருவை சேர்ந்தவர் காளேஸ்வரன். இவரது மனைவி மின்மினி (24). இவர் தனது ஒன்றரை வயது குழந்தை சாய்னிகாவுடன் கடந்த 10ம் தேதி பட்டரைத்தெருவில் உள்ள நம்பி நாகாத்தம்மன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறபட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் காளேஸ்வரம் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Manamadurai ,teenager ,baby ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...