×

வாரச்சந்தையில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

சாயல்குடி, அக்.18:  முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செயல் அலுவலர் மாலதி தலைமை வகித்தார். எழுத்தர் ராஜேஸ் முன்னிலை வகித்தனர். டெங்கு கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சலை தடுக்கும் முறைகள் குறித்து செயல்முறையுடன் விளக்கி பேசினர். நேற்று வாரச்சந்தை என்பதால் பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், டிரைவர்கள், பேருந்துநிலைய வியாபாரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Earthquake ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்