×

டூவீலர் விபத்தில் 2 பேர் படுகாயம்

பட்டிவீரன்பட்டி, அக். 18: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவை சேர்ந்தவர் கண்ணன் (31). அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (29). இருவரும் நேற்று டூவீலரில் வேலைக்காக சித்தையன்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். டூவீலரை கண்ணன் ஓட்டி வந்தார். வழியில் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயமுருகன் (37) என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...