×

மதுகுடிக்க பணம் தரக்கேட்டு மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் அடுத்த டி.கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(29). இவரது மனைவி நதியா(23). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தில் தனது மனைவி நதியாவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினாராம்.  இதில் ஆத்திரமடைந்த செந்தில், நதியாவை ஆபாசமாக பேசி, கத்தியால் சரமாரி குத்தினாராம். இதில் படுகாயமடைந்த நதியா திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...