×

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி,அக்.18: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திறஅகு அதன் வட்டத்தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்டத்தில் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப கோரி உள்ளிருப்பு போராட்டம், கருப்பு பேஸ் அணிந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Dasildar ,office ,Ponnamaravathi Taluk ,
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...