×

நெசல் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு

வானூர், அக். 18:  வானூர் தாலுகா நெசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானூர் தாலுகா நெசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்ய தனியாக நெசல் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டு காலை வரை மின்தடை நீடிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் மின்விசிறி இயங்காமல் பொதுமக்கள் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையை காட்டுவார்களோ என்ற அச்சத்திலும் உள்ளனர். எனவே மின்சாரம் தடையின்றி கிடைக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : weasel area ,
× RELATED நெசல் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு