×

விவசாயிகள் மகிழ்ச்சி கரூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூர்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்துவகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினி பயிற்சி, பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயகுறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

தனியார் துறை நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வருகைபுரிந்தோ தேர்வு செய்துகொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற மற்றும் இவ்வாண்டு கல்லூரி படிப்பை முடித்து வேலைதேடும் இளைஞர்கள் இன்று காலை 11மணியளவில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்