×

தீபாவளி சந்தை விற்பனை விரைவில் துவக்கம் திருவள்ளுவர் மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டும்

கரூர்: தீபாவளி சந்தை விற்பனை துவங்கப்படவுள்ளதால் கரூர் திருவள்ளுவர் மைதானத்தை விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரின் மையப்பகுதியில் திருவள்ளுவர் மைதானம் உள்ளது. அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் இந்த மைதானத்தில் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருவது வாடிக்கை. கடந்த சில வாரங்களாக திருவள்ளுவர் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்பட்டு 40நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பொருட்காட்சி முடிவுற்றது.
பொருட்காட்சி முடிவுற்று நாட்கள் கடந்தும் இதுநாள் வரை மைதான வளாகம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பொருட்காட்சிக்காக அமைக்கப்பட்ட ராட்டினங்கள் உட்பட பல்வேறு சாதனங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் கரூர் நகரப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையால் நடைபயிற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, கடைகள் அமைக்கப்பட்டு, தரைக்கடைகள் அனைத்தும் இந்த மைதான வளாகத்தில் செயல்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தீபாவளிக்காக தரைக்கடை அமைக்க ஒரு வாரமே உள்ளதால் அந்த பணியும் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. எனவே திருவள்ளுவர் மைதானத்தை விரைந்து சுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Diwali ,market sale ,Tiruvalluvar Ground ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது