×

இடிந்து விழும் நிலையில் பள்ளி சத்துணவு கூடம்

உடுமலை, அக். 17:  உடுமலை அருகே உள்ள  அரசு பள்ளியில் சத்துணவு கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடுமலை அருகே உள்ள தளியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 140 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தின் கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. இதில் சிதிலமடைந்த பகுதியில் கம்பிகள் வெளியே நீட்டிய வண்ணம் உள்ளன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் கட்டிடம் உள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் மீது விழும் சிமென்ட் காரையால் அவர்கள் காயமடைகின்றனர். எனவே பெரிய விபரீதம் நிகழும் முன், சத்துணவு கூடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school ,state ,collapse ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி